Wednesday, 29 April 2015
Monday, 27 April 2015
Tuesday, 21 April 2015
Thursday, 9 April 2015
உலைக்களம்!
உலைக்களம்!
வறுமை எனும் கொடுமை-
வயிற்றினில் தீ எரிக்க
துள்ளியோடும் சிறுவயதில்
பள்ளிக்கூடம் நீ சென்று
பாடங்கள் படித்தறிய-
முடியாத உன் சோகம்?
இரும்பென அசையாத
இதயம் கொண்டிருந்தால்
அனுபவப் பாடந்தரும்
வாழ்க்கை உலைக்களம்
புடம்போட்ட தங்கமென
உன்னை - ஒளிரச்செய்யும்;
நிரந்தரப் புன்னகையில்
முகம் மிளிரச் செய்யும்!
ரவிஜி---
(புகைப்படம் – நன்றி கூகிள்)
Wednesday, 1 April 2015
ஆ(க்)கச் சிறந்த கவிதை!
ஆ(க்)கச் சிறந்த கவிதை!
கண்ணுறும் பல காட்சிகள்
செவிமடுக்கும் சில வார்த்தைகள்
என் இதயத்தின் உள்ளோடி-
வரிகளாய் வடிவம் கொள்ளும்!
காலங்கள் கொஞ்(சு)சம்
கடந்து
மீண்டும் நான் (சு)வாசித்திட-
வார்த்தைகள் மாற்றம் வேண்டும்!
வந்து விழுந்த வார்த்தைகள்-
மாற்ற(ப்)ம்
பெற்ற எழுத்துகள்
எது மேலென அறிவு கேட்கும்.
“ஆ(க்)கச்
சிறந்த கவிவரிகள்
இனிதான் நீ எழுத வேண்டும்”
இளக்கரிக்கும் - என் இதயம்!
ரவிஜி…
(பட உதவி: நன்றி கூகிள்)
Subscribe to:
Posts (Atom)