Thursday 9 April 2015

உலைக்களம்!

உலைக்களம்!
வறுமை எனும் கொடுமை-
வயிற்றினில் தீ எரிக்க
துள்ளியோடும் சிறுவயதில்
பள்ளிக்கூடம் நீ சென்று
பாடங்கள் படித்தறிய-
முடியாத உன் சோகம்?
இரும்பென அசையாத
இதயம் கொண்டிருந்தால்
அனுபவப் பாடந்தரும்
வாழ்க்கை உலைக்களம்
புடம்போட்ட தங்கமென
உன்னை - ஒளிரச்செய்யும்;
நிரந்தரப் புன்னகையில்
முகம் மிளிரச் செய்யும்!
ரவிஜி---
(புகைப்படம் – நன்றி கூகிள்)

17 comments:

  1. வணக்கம்
    ஐயா
    இரசித்தேன் ...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. //இரும்பென அசையாத இதயம் கொண்டிருந்தால் அனுபவப் பாடந்தரும் வாழ்க்கை உலைக்களம் புடம்போட்ட தங்கமென உன்னை - ஒளிரச்செய்யும்//

    ஆஹா !

    அந்தச்சிறுவன் ஒளிர்வானோ என்னவோ ... ஆனால் ..... கவிதை வரிகளே ஒளிரத்தான் செய்கின்றன ! :)

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வாத்யாரே! இப்பொழுது தோலின் நிறம் மட்டும் ஒளிர்கிறது! பின்னர் திறமும் ஒளிரக்கூடும் அல்லவா!? அன்புடன் உங்கள் எம்ஜிஆர்

      Delete
  3. அருமையான கவிதை ஐயா.

    ReplyDelete
  4. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. மிக மிக நன்றி! உங்கள் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறோம்!

    ReplyDelete
  6. அருமையான கவிதை நண்பரே! அதுவும் அனுபவப் பாடம்...ம்ம்ம் புடம் போட்ட பொன் போன்றதுதான்...

    ReplyDelete
  7. வாருங்கள் நண்பரே! மிகவும் நன்றி!

    ReplyDelete