Monday 24 December 2012

(மர)மனித(மர)ம்

(மர)மனித(மர)ம்!

மனிதனா-

மரத்துக்கு இணை?

தன்னை சிதைத்திடும் கைகளுக்கும்

மணம் கொடுக்கும்.

பசித்திருக்கும் மனிதனுக்கு

கனி கொடுக்கும்.

பறவைகள் சார்ந்திருக்க

இடம் கொடுக்கும்.

தன்னினம் அழித்திடும்

மனிதன் – தானழிந்தால்

எரித்திடத் தானே

சிதையாகும்.

உயர்ந்திருக்கும் மலைப்பரப்பில்

நிலச்சரிவைத் தடுத்திருக்கும்.

பூமிக்கு – வீசிடும் சாமரம்

நிழல் தரும் – பசிய மரம்.

பேசிக் கெடுத்திடும் மனிதன்;

பேசாமலே கொடுத்திடும் மரம்.

மூச்சாலும் மாசுபடுத்தும் மனிதன்;

சுவாசத்தாலும் சீர்படுத்தும் மரம்.

அலைந்து கெடுக்கும் மனிதன்;

அசையாமலும் கொடுக்கும் மரம்!

உருவத்தில் மட்டுமன்றி

செயலாலும் - உயர்ந்து நிற்கும்!

மரத்துக்கா…

மனிதன் இணை?

ஓரறிவு மரத்தின்…

மனிதத்துக்கா – இந்த

ஆறறிவு

மனித மரம் இணை…?

 

                ரவிஜி . . .

(புகைப்படம்-நன்றி கூகிள்)

2 comments:

  1. ஓரறிவு மரத்தின்…
    மனிதத்துக்கா – இந்த
    ஆறறிவு
    மனித மரம் இணை…?
    //அருமை தொடருங்கள்!//

    ReplyDelete