Monday 10 December 2012

தூக்கம் வராத இரவுகள்...?

தூக்கம் வராத இரவுகள்...?

கண்ணடிக்கும் பருவம்
தொலைந்து போனது
கண்ணிமைக்கும் நேரமாய். . .
கண் - துயில மறுத்திருக்கும்,
இதயத்தில் பாரமாய்.

ஜன்னல் வழி
பால் நிலவொளி
பகலெனப் பொழியும்.
ஊமையென உள்மனமோ
இருளினில் உழலும்.

அன்பால் அரவணைத்து
இதழ் பதித்த இதம்
மீண்டும் மீண்டுமாய்
நெருஞ்சியென நெருடும்.

சில்வண்டின் ரீங்காரமும்
கிறீச்சென்று காதறுக்கும்
ஓலமாய் உரத்துக் கேட்கும்.

முழுமையான தனிமையென
வெறுமையில் உழல்கையில்
நரகத்தையே நேரில் காட்டும்
தூக்கம் வராத இரவுகள்...?

ரவிஜி. . .

புகைப்படம்:நன்றி கூகிள்






2 comments:

  1. நண்பரே! தங்களது படைப்புகள் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. வாருங்கள் http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_21.html நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அறிமுகத்திற்கு மிகவும் நன்றி...இன்றைய கவிதை அருமை...!

      Delete