Sunday 5 May 2013

நான்...?!


நான்…!
நியாயமற்றதாய்
என் மீது எவரும்
குற்றம் சாட்டிட
கள் குடித்த,
குரங்கெனத் துள்ளி,
தேளாய் திருப்பி
கொட்டிடும் என் மூளை!
பாசத்தால் – யாரும்
அரவணைத்தாலும்
நேசத்தில் ஊறிய
வார்த்தை தந்தாலும்
கண்ணீர்த் துளிகளால்
நன்றி சொல்லிடும்
மவுனமாய்
என் – இதயம்…!
… … … … …
நாவும் உதடுகளும்
மூளையின் கருவிகள்.
கண்களோ - இதயத்தின்
வாசற் கதவுகள்.
ரவிஜி
(படம் : நன்றி கூகிள்)

3 comments: