Saturday 12 July 2014

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் இரண்டாம் பரிசு!


VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் இரண்டாம்  பரிசு!

மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 23 – யாதும் ஊரே யாவையும் கேளிர் 
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
 இரண்டாம் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
இது VGK-13 ல் துவங்கி VGK-23 வரை நான் கலந்துகொண்ட 11 போட்டிகளில் நான் பெறும் ஒன்பதாவது பரிசாகும்! உலகெங்குமிருக்கும் கோடிக்கணக்கான வலைப்பதிவாளர்களுடன் ஏதோ ஒரு மூலையில் கிடந்த எனக்கும்
வாய்ப்பளித்தஉயர்திரு வை.கோ. அவர்களுக்கும்
எனது விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த
 நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும்
எனது மனமார்ந்த சிரம் தாழ்த்திய நன்றிகள்!
VGK 23 – யாதும் ஊரே யாவையும் கேளிர் 
சிறுகதைக்கான இணைப்பு இதோ!
பரிசறிவிப்புடன் எனது விமர்சனம் வெளியான இணைப்பு இதோ!

என்றும் அன்புடன் MGR

8 comments:

  1. உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    மீண்டும் தங்களுக்குப் பரிசு கிடைத்துள்ளதும் இதன் மூலம் தாங்கள் மீண்டும் ஒரு ஹாட்-ட்ரிக் அடித்துள்ளதும் [VGK-21 to VGK-23] எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இந்தப் போட்டியில் தங்களின் மீண்டும் வெற்றியை தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    மேலும் மேலும் தொடர்ந்து இதே போட்டிகளில் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல்வேறு பரிசுகள் வென்றிட என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    அன்புள்ள VGK

    ReplyDelete
    Replies
    1. கரும்பயும் குடுத்து - கூலியும் குடுத்து - சாப்புடுரவனோட மகிழ்ச்சியப் பாத்து - பாராட்டவும் செய்யுற மனசு யாருக்கு வரும்???? 'வாத்யாரே' மிக...மிக...மிக...மிக.. நன்றி!

      Delete
  2. 'தேடி வந்த தேவதை'யாக மேலும் ஒரு பரிசு வாத்யாரை நாடி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஏதும் இல்லை.

    அதனால் பல்லைக்கடித்துக்கொண்டு ’பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?’ கதைக்கு உற்சாகத்துடன் விமர்சனம் எழுதி அனுப்புங்கோ வாத்யாரே !

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. பல் சுவையுடன், பல் நோக்குடன் தாங்கள் எழுதிய கதைகளுக்கு விமர்சனம் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் அரிய வாய்ப்பு! பல்வேறு வேலைகள் இருந்தாலும் நழுவ விடுவேனா!

      Delete
  3. அன்பின் இரவிஜி இரவி - தாங்கள் கலந்து கொண்ட 11 போட்டிகளிலும் ஒன்பது போட்டிகளீல் பரிசு பெற்றமை மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது - மனம் கனிந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகுக , மேன் மேலும் மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு அனைத்திலும் பரிசுபெற நல்வாழ்த்துகள்.

    தங்கள் திறமை வெளிப் பட்டிருக்கிறது , பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. சிறப்புற பாராட்டி சீர்மிகு வாழ்த்துகளையும் வாரித்தந்த அன்பின் சீனா அவர்களே! உங்களைப்போல வைகோ அவர்களைப்போன்றோரின் பாராட்டுகளும் ஊக்கமும் சாவிகொடுத்த வால்கிளாக் போல வேலையைத்துவங்க வைக்கிறது! நன்றி ஐயா!

      Delete
  4. பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete