Wednesday, 22 May 2013
Thursday, 9 May 2013
பரிட்சை…?!
பரிட்சை…?!
வெற்றியைத் தொட்டவர்
உயர்த்திடும் விற்புருவம்…
விட்டவர் விழியோரம்
துளிர்த்திடும் துளிஈரம்…
தொட்டிட்ட வெற்றியோ
சிகரத்தில் சேர்க்கும்…
வீழாமல் இருந்திட
தேவை நல் நிதானம்.
இடரிடும் தோல்வி
பாதாளம் காட்டிடும்…!
என்றாலும் வென்றிட
உன்னை அது உசுப்பிடும்…!
தோல்வியும் வெற்றியின்
மற்றுமோர் அறிகுறி
உணர்ந்து நடக்காதவன்
தேறாத தற்குறி!
ரவிஜி…
(புகைப்படம் : நன்றி கூகிள்)Wednesday, 8 May 2013
Sunday, 5 May 2013
நான்...?!
நான்…!
நியாயமற்றதாய்
என் மீது எவரும்
குற்றம் சாட்டிட
கள் குடித்த,
குரங்கெனத் துள்ளி,
தேளாய் திருப்பி
கொட்டிடும் என் மூளை!
பாசத்தால் – யாரும்
அரவணைத்தாலும்
நேசத்தில் ஊறிய
வார்த்தை தந்தாலும்
கண்ணீர்த் துளிகளால்
நன்றி சொல்லிடும்
மவுனமாய்
என் – இதயம்…!
… … … … …
நாவும் உதடுகளும்
மூளையின் கருவிகள்.
கண்களோ - இதயத்தின்
வாசற் கதவுகள்.
ரவிஜி…
(படம் : நன்றி கூகிள்)
புது டில்லி…
புது டில்லி…
சு'தந்திர' கா(நா)ட்டில்
துள்ளித் திரியும்
புள்ளி மான்கள்…
துவண்டு மருளும்
மழலை மாறாது
மான் குட்டிகள்…
பேதம் பாராது
எச்சில் சுரக்க-
ரத்தம் சுவைக்கும்,
காட்டுப் புலிகள்.
குதறும் பற்களை
சிதற அடித்தால்-
நீளும் நாக்கினை
வெட்டி எறிந்தால்-
ஆடும் வாலினை
அறுத்து வீசினால்-
துடிக்கும் துப்பாக்கியால்
வெடித்துக் கொன்றால்-
ஆடும் புலிகளின்
ஆட்டம் – ஓயும்.
ரவிஜி…
(புகைப் படம் - நன்றி கூகிள்)
Subscribe to:
Posts (Atom)