Wednesday 2 January 2013

நா(வா)க்கு...!

நா(வா)க்கு...!

நேற்று ஒன்றும்
இன்று மற்றொன்றும்
நாளை வேறுமாக
நிலையின்றி உழற்றும்.

நண்பன் எனப் பேசும்,
விரொதியாய் மகிழும்.
லாபமே குறியாய் வாழ்த்தும்
இல்லையானால் வீழ்த்தும்.

நுனியில் இனிப்பை உணரும்
அடியிலோ கசப்பையே உணர்த்தும்.
நல்லவர்க்கும், வல்லவர்க்கும்
மற்றவர்க்கும் ஒன்றுபோல் தோன்றும்
நோக்கின்றி சுழலும் நாற்புறமும்...

பயன்படுத்துவோரையே
பழியிலும் மாட்டும்,
பாழாக்கும் - நா(வா)க்கு.

                                ரவிஜி...

புகைப் படம் : நன்றி கூகிள்.

 

4 comments: