Wednesday 1 April 2015

ஆ(க்)கச் சிறந்த கவிதை!


ஆ(க்)கச் சிறந்த கவிதை!
கண்ணுறும் பல காட்சிகள்
செவிமடுக்கும் சில வார்த்தைகள்
என் இதயத்தின் உள்ளோடி-
வரிகளாய் வடிவம் கொள்ளும்!
காலங்கள் கொஞ்(சு)சம் கடந்து
மீண்டும் நான் (சு)வாசித்திட-
வார்த்தைகள் மாற்றம் வேண்டும்!
வந்து விழுந்த வார்த்தைகள்-
மாற்ற(ப்)ம் பெற்ற எழுத்துகள்
எது மேலென அறிவு கேட்கும்.
“ஆ(க்)கச் சிறந்த கவிவரிகள்
இனிதான் நீ எழுத வேண்டும்”
இளக்கரிக்கும் - என் இதயம்!
ரவிஜி…
(பட உதவி: நன்றி கூகிள்)

13 comments:

  1. அருமையான வரிகள் கவிஞரே வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. உடனடி வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. ஆகச் சிறந்த கவிதை ..... தங்களுக்கு ஆக்கச் சிறந்த கவிதையாகட்டும் ! வாழ்த்துகள்.

    மீண்டும் ஓர் புதிய போட்டி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுவும் சற்றே நினைவிருக்கட்டும்.

    http://gopu1949.blogspot.in/2015/03/120404.html

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாத்யாரே! நன்றி வருகிறேன்!!! உங்கள் எம்ஜிஆர்

      Delete

  4. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா

    அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அருமை..... பாராட்டுகள் நண்பரே.

    ReplyDelete
  7. அருமையான வரிகள்! நண்பரே!

    ReplyDelete