Thursday 25 August 2016

ந(க)டப்பு…?!

ந()டப்பு…?!
மழையின் தூற(வ)லை அனுபவியுங்கள்;
வெற்றாய் நனைந்து திரும்பாதீர்கள்.
உணவின் சுவையிலே மயங்குங்கள்;
வயிற்றை மட்டுமே நிரப்பாதீர்கள்.
கவினுறு காட்சிகளை ரசியுங்கள்;
சி(நி)ந்தனையில் ஊறி ந()டக்காதீர்கள்.
தென்றலை உணர்ந்து தழுவுங்கள்;
காற்றாய் நினைத்து நழுவாதீர்கள்.
எதிரே கண்டால் புன்னகையுங்கள்;
புதிரென நினைத்து கடக்காதீர்கள்!
பணத்தை மட்டுமே ‘எண்ணா’தீர்கள்…
மனத்தை பற்றியும் நினையுங்கள்.
வாழ்க்கையை சுகித்து வாழுங்கள்
நாட்களை மட்டும் ந()டத்தாதீர்கள்!
எம்.ஜி.ஆர்...
(பட உதவி : நன்றி கூகிள்)
(முதல் அடி எடுத்துக் கொடுத்த பாப் மார்லிக்கு நன்றி)

Thursday 4 August 2016

நே(யோ)சிப்பு…!






நே(யோ)சிப்பு…!
நீங்கள் சொல்கிறீர்கள்
மழையின் மீது மோகமென்று;
ஆனால் மழை வந்தாலோ-
குடையால் போடுகிறீர் மடை!
நீங்கள் சொல்கிறீர்கள்
சூரியன் சுகம் தருவதாய்;
ஆனால் வெய்யில் வந்தாலோ
நிழல் நாடி ஒதுங்குகிறீர்கள்!
நீங்கள் சொல்கிறீர்கள்
காற்றோடு காதல் உண்டென;
ஆனால் காற்று வந்தாலோ
ஜன்னலை மூடி விடுகிறீர்கள்!
என்னையும்நேசிப்பதான
உங்களின் உச்ச வார்த்தைகள்-
அச்சம் நோக்கி செலுத்துகிறது;
அதுவும் நிராகரிப்போ என்று!!
(ரெகே பாடகர் - பாப் மார்லி)
தமிழில் – ரவிஜி…
(புகைப்படங்கள் : நன்றி கூகிள்)