Wednesday 22 January 2014

இயற்கை ‘மணம்’



இயற்கை மணம்

பூக்கள் மலர்ந்து குலுங்கும் குளிர் நந்தவனம்!
மண(ய)க்கும் பன்னிறப் பூக்களின் -  மென்
குவியலென இவனின் பொன்னிறக் காதலி.
கொஞ்சிடும் வேளையில் குறுக்கே வந்துற்று
கூந்தல் நுகரச் சிறகடிக்கும் ராவணவண்டுகள்.
வண்டுகள் வந்தமர்ந்தால் எடை தாங்காது
வாடுமே நூலிடை என விரட்ட எத்தனிக்கும்
வாளேந்திக் காய்த்த வீரனின் காதல் கரம்.
விரட்ட நீண்ட கரம் விரலால் தீண்டுமென்று
எண்(நா)ணம் மேலிட்டு சிவந்து விலகும் காதலி…!

    ரவிஜி
(சங்க காலத்தில்தான் இதெல்லாம் சாத்தியம் போலும்ம்!)



திரு வெங்கட்நாகராஜ் அவர்களின் படத்திற்கு “கவிதை எழுத வாருங்கள்” என்ற தலைப்பிற்கு ரவிஜியின் கவிதை இது.

கவிதைக்கான அறிமுகம் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் வலைப்பூவில் கண்டபடி.

மாயவரத்தான் எம்ஜிஆர் எனும் வலைப்பூவில் 2012-ஆம் வருடம் முதல் எழுதி வரும் திரு ரவிஜி தன்னை ‘கவிதைக் கிறுக்கன்என்று தலைப்பில் குறிப்பிட்டு உள்ளார். இது வரை அவரது கவிதைகளை/படைப்புகளை நான் படித்தது இல்லை.  அவரது கவிதையை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தபின் அவரது பதிவுகளில் சிலவற்றை படித்தேன். அப்படி படித்ததில் பிடித்த கவிதை ஒன்று எனது அடுத்த ஃப்ரூட் சாலட் பதிவில் வெளியிடுகிறேன். அவரது பதிவுகளை நீங்களும் படிக்கலாமே!

(உன்னத ஓவியம் வரைந்த திரு. ராஜன் அவர்களுக்கும், கவிதையை தனது வலைப் பூவில் வெளியிட்ட திரு. வெங்கட் நாகராஜ் அவர்களுக்கும். எனது மனமார்ந்த நன்றிகள்)

Monday 6 January 2014

மெளனம்...!



மெளனம்
சரசரத்து சத்தமிடும் உலர்ந்த சருகுகள்
மெளனமாய் மணந்தரும் மலர்ந்த பூக்கள்.
உயிரையும் தருவதாய் பசப்பிடும் நா(வா)க்கு;
வாஞ்சையாய் வருடிடும்- மெளன அரவணைப்பு.
இருவேறு மொழிகளி(ல்)ன் புரியாத – காதல்;
புரிய வைத்திடும் கண்கள் சொல்லும் கதைகள்.
வாய்விட்டு சிரித்திருக்கும் - விட்டோடிடும் திரிப்பு
வாழ்வெங்கும் துணையாகும் - கண் கலங்கும் நட்பு.
அழிக்கும் சூறாவளி சு(உ)ழற்றி ஓலமிடும்.
அசையாத மலைமுகடு மெளனமாய் நிமிர்ந்து நிற்கும்.
வீழ்ந்திடும் மழை உரத்துப் பெய்யும்.
சூல் கொண்ட மேகம் அமைதியில் தவழும்.
பேசினாலும் புரியாது மற்ற மொழிகள்
பேசாமல் புன்னகைக்கும் உற்ற மெளனம்.
பிறக்கும் குழந்தையென துவக்கம் குரல் கொடுக்கும்.
முடிக்கும் மரணமென முழுமை மெளனிக்கும்.
ஆர்ப்பரிப்பை வெ(கொ)ல்ல வேண்டும்
மெளனம் பழக வேண்டும்.
போரின் முதல் பகை அமைதியின் மறுவகை
மெளனம் – பழ(க்)க வேண்டும்.
ரவிஜி…
(‘பரணி’  ஜனவரி – பிப்ரவரி 2007 இதழில் வெளியிட்ட புதுவை லெனின் பாரதிக்கு நன்றி)
(பட உதவி: நன்றி கூகிள்)