Sunday 5 May 2013

புது டில்லி…

புது டில்லி…
சு'தந்திர' கா(நா)ட்டில்
துள்ளித் திரியும்
புள்ளி மான்கள்…
துவண்டு மருளும்
மழலை மாறாது
மான் குட்டிகள்…
பேதம் பாராது
எச்சில் சுரக்க-
ரத்தம் சுவைக்கும்,
காட்டுப் புலிகள்.
குதறும் பற்களை
சிதற அடித்தால்-
நீளும் நாக்கினை
வெட்டி எறிந்தால்-
ஆடும் வாலினை
அறுத்து வீசினால்-
துடிக்கும் துப்பாக்கியால்
வெடித்துக் கொன்றால்-
ஆடும் புலிகளின்
ஆட்டம் – ஓயும்.
ரவிஜி…
(புகைப் படம் - நன்றி கூகிள்)

5 comments: