Thursday 9 May 2013

பரிட்சை…?!

பரிட்சை…?!
வெற்றியைத் தொட்டவர்
உயர்த்திடும் விற்புருவம்…
விட்டவர் விழியோரம்
துளிர்த்திடும் துளிஈரம்…
தொட்டிட்ட வெற்றியோ
சிகரத்தில் சேர்க்கும்…
வீழாமல் இருந்திட
தேவை நல் நிதானம்.
இடரிடும் தோல்வி
பாதாளம் காட்டிடும்…!
என்றாலும் வென்றிட
உன்னை அது உசுப்பிடும்…!
தோல்வியும் வெற்றியின்
மற்றுமோர் அறிகுறி
உணர்ந்து நடக்காதவன்
தேறாத தற்குறி!
ரவிஜி…
                                               (புகைப்படம் : நன்றி கூகிள்)

No comments:

Post a Comment