Monday 24 December 2012

தரையிறங்கல்...!

தரையிறங்கல்

பாயின்மீது சோம்பல் முறித்தபடி
பார்வையை வீசுகிறேன்
பால்கனிக் கிராதியின் வெளியே.
வெள்ளை மேகங்கள் நிறைந்த
நீலவானம் பின்னணியாக,
தலையசைக்கும் பச்சை மரங்கள்.
கிளையற்ற ஒற்றை மரமாய்
நிமிர்ந்து நிற்கும்
கண்சிமிட்ட மறந்திட்ட
கலங்கரை விளக்கம்.
வானிலிருந்து பூமிக்கு
பார்வையால் வலைவிரித்து
வட்டமடிக்கும் வல்லூறுகள்.
பெயர் தெரியாத சிறுபறவை
பால்கனியில் வந்தமர்ந்து
“கீச்…”,”கீச்..”, என்றழைக்க-
எழுந்து அருகே செல்கிறேன்;
கீழே
மரத்தடியில் – வரிசையாய்
கல்லறைகள்.
பறவை பறந்து இடம் பெயர
என் மனம் மீண்டு(ம்)
தரையிறங்கும்.

                  ரவிஜி…
(புகைப்படம்: நன்றி கூகிள்)

 

2 comments:

  1. வானிலிருந்து பூமிக்கு
    பார்வையால் வலைவிரித்து
    வட்டமடிக்கும் வல்லூறுகள்.
    //இரசித்தேன்!

    ReplyDelete
  2. வரவிற்கும் கருத்து தெரிவிற்கும் நன்றி...!

    ReplyDelete