Wednesday 25 November 2015

நூ(ஊ)று ரூபாய் நோட்டு…!!!






தீபாவளி 2015 ஒட்டி ஊற்று வலையுலக எழுத்தாளர் மன்றத்தினால் நடத்தப்பட்ட உலகளாவிய படத்துக்கான கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
பரிசு அறிவிற்பிற்கான இணைப்பு இதோ!


நூ()று ரூபாய் நோட்டு…!!!
மொழிகளின் பேதம் எதுவுமில்லை;
இல்லாத நாடுகள் எங்குமில்லை!
வார்த்தைக்கு இங்கு மதிப்பில்லை;
எண்ணம்மட்டும் மதிக்கப்பெறும்!
வியர்வையின் ஈரம் பார்த்ததுண்டு;
ரத்தத்தின் கோரம் சுவைத்ததுண்டு!
இதயங்களின் அருகில் இடமுண்டு;
()வனையும் ()மாற்ற திறமுண்டு!
எட்டாத உயரமென யாதுமில்லை;
இதனை விரும்பாது எவருமில்லை!
குழந்தையும் வீசும் குப்பைத்தொட்டி-
இதுவரை காண வாய்க்கவில்லை!
பிணமும் வாய் திறக்கச்செய்யும்-
பணம் - பத்தும்கூட செய்துவிடும்;
இப்பணம் - ‘நூ()றும் செய்யக்கூடும்!
 எம்.ஜி.ஆர்.
(வாய்ப்பளித்த ஊற்று வலையுலக எழுத்தாளர் மன்றத்திற்கும், பரிசுக்குத் தெரிவு செய்த நடுவர்களுக்கும் நன்றி)

10 comments:

  1. தாங்களே வெற்றியாளர்களில் சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷன் ஆக உள்ளீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வெற்றிபெற்றமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா

    பரிசில்கள் மிக விரைவில் வந்தடையும்.... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இரண்டாவது பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் சகோ

    ReplyDelete