Monday 1 October 2012

உயர்வு

உயர்வு

விண்ணை முட்டி
உயர்ந்து நின்ற மலை
கொக்கரிதது,
சமவெளியைப் பார்த்து;
"நான் உயர்ந்தவன்!"

சமவெளி சொல்லியது
"உண்மை-
ஆனால் உன்
உயர்வு வெளிப்படுவது
என்
சம நிலையொடு
ஒப்பிடப் படும் போதுதான்!"
மலை-
மெளனமாயிற்று.

                                                                                                   ரவிஜி...
                                                                                                 (நன்றி - தாமரை-நவம்பர்-91)
(புகைப்படம் - ரவிஜி)

2 comments: