Saturday, 9 May 2015

கு(கொ)டை!


கு(கொ)டை!
இயற்கை சிந்திடும்
மழை தவிர்த்திட
குடை கொடுத்திட்டு
தான் நனைந்திடும்…
பாச மழையதனை
வற்றாத உள்ளமதால்
தினம் பொழியும்
கொடை வள்ளல்!
ரவிஜி---
(புகைப்படம் : நன்றி கூகிள்)
(முன்னறி தெய்வமாம் அன்னையர்க்கு சமர்ப்பணம்)

Friday, 8 May 2015

‘வளரும்’ பருவம்!


‘வளரும்’ பருவம்!
குழந்தைப் பருவத்துப் பாசம்…
நெஞ்சிலே ஒட்டிக் கொள்ளும்!
வளரும் பருவம் வந்துற–பெரு(று)ம்
‘கொம்பென’ முட்டிக் கொள்ளும்.
ரவிஜி…
(புகைப்படங்கள் – ரவிஜி)
(நான் குடியிருந்த வீட்டின் எதிரிலேயே
இரண்டு படங்களையும் எடுக்க வாய்த்தது!!!)

Wednesday, 6 May 2015

உ(வெ)ள்ளம்

உ(வெ)ள்ளம்
பேதங்கள் ஏதுமின்றி
அ()ள்ளிச் செல்லும்
காலம் - வெள்ளம்?!
தன் உயிர் கருதாது-
மகளுயிர் காத்திடும்,
ஈடில்லா தாயுள்ளம்!
ரவிஜி---
(படம்: நன்றி கூகிள்)

Tuesday, 5 May 2015

கை-வண்ணம்!!!


கை-வண்ணம்!!!
துச்சமென எண்ணி
கிள்ளி வீசும் நகமும்
வண்ணமாய் மின்னும்
மகளின் - கைவண்ணம்!
ரவிஜி---
(புகைப்படங்கள்: நன்றி கூகிள்)

Wednesday, 29 April 2015

கறுப்பு – வெள்ளை!


கறுப்பு – வெள்ளை!
அரிதாரம் - பூச்சு இல்லை
அல()ங்காரம் ஏதுமில்லை!
பொன்னகை – இல்லையில்லை
புன்னகை – எல்லையில்லை!
கறுப்பு – ‘உண்மை’ நிறம்
வெண்மை அவளின் மனம்!
கண்கள் இதயம் காட்டும்
பெண்மை திறத்தின் நீட்டம்
இதயத்தை நிறைக்குமிவள்
என்றும் – என் செல்ல மகள்!
ரவிஜி---
(பட உதவி : நன்றி கூகிள்)

Monday, 27 April 2015

மடி…



மடி…
காசின் பொருட்டு
நாசம் செய்திடும்
வேஷம் கட்டும்-
தோஷம் விட்டிடு!
குழந்தை போலும்-
பாசம் கொள்ளும்
மனம் படைத்தால்,
பசுவின் மடியும்
பசியை ஆற்றிட
பாலினை சுரக்கும்…
புலியின் மடியும்
கண்துஞ்சிட ஓர்
இடம் கொடுக்கும்!
ரவிஜி---
(புகைப்படங்கள்: நன்றி கூகிள்)

Tuesday, 21 April 2015

த(க)ண்ணீர்?!


த()ண்ணீர்?!
உள்ளே ‘தண்ணீர்’ ஊற்றி-
வெளியில் ஊ(நா)றிக் கிடக்க,
கடந்து செல்லும் நிழலும்-
கால் செருப்பால் இடறும்!
ரவிஜி---
(பட உதவி : நன்றி கூகிள்)