Thursday, 16 October 2014

கா(ன)தலில் ‘வரி’த்’தேன்’!


கா()தலில் ‘வரி’த்’தேன்’!
தூய வெள்ளைக் காகிதமாய்
இருந்திட்ட உந்தன் நிஜம்!
'கண்ட' வாலைக் க(பெ)ண்கள்
உன்மேல் பதித்துச் சென்ற
தேன் கா()தல் பாவரிகள்!
என் விழிகளில் தேடியுன்னை
வரி’களினூடே ப(பி)டித்தேன்
உந்தன் சுயம் புரிந்த பின்னே
‘என்னவன்’ என வ()ரித்தேன்!
ரவிஜி---
(பட உதவி : நன்றி கூகிள்)

Friday, 26 September 2014

‘கடந்த’ காலம்!

கடந்த காலம்!
குளத்தில் விசிறிய
குசும்புக் கல்லென
கலங்கச் செய்திடும்
துன்பம் எல்லாமே
துணிந்து எதிர்கொள்ள
தோற்ற(த்)தில் சிறிதாகி
காலத்தின் ஓட்டத்தில்
கரைந்து போகும்!
எ()துவும் இங்கே-
கடந்து போகும்!
எம்ஜிஆர்---
(பட உதவி - நன்றி கூகிள்)

Saturday, 20 September 2014

தேடல்!


தேடல்!
எந்தன் சுயம்
காணும் விருப்பத்தில்
எனது தேடல்கள்--!
நிழலை
கண்ணுற்றேன்!
நிஜத்தினில்-
எப்போது…?
(ஆக்கமும், புகைப்படமும்
புகைப்படத்திலும்எம்ஜிஆர்)
(வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த நாட்களில் பதிவிட்டது)

உரிமை!


உரிமை!
உளுத்துப்போன
‘நிலை’ ஆனாலும்
உடைந்துபோன
ஜன்னல் ஆனாலும்
பூட்டிய பூட்டு
எடுத்தியம்பும்
மிஞ்சிய வீட்டின்
‘பத்திர’ நிலை!
 (ஆக்கம் & புகைப்படம் ரவிஜி---)
(எனது பள்ளிக்கூட நண்பனின் குடியிருந்த வீடு! அவன் குடும்பத்தோடு இடம் பெயர்ந்து சென்றுவிட்டான்! வீடு காரை பெயர்ந்துகிடக்கிறது! பின் பக்கம் குடிமகன்கள் ஒதுங்கும் இடமாகிவிட்டது) 

Tuesday, 16 September 2014

அப்பாவின் – ‘அம்மா!’…







அப்பாவின் – ‘அம்மா!’…
அவள் மூச்சில் ஊதிக் கட்டி வைத்த
பலூனை ‘குத்தி’விட்டானென்று
அறியாச் சிறுவனிடம் காழ்ப்பு…!
அவள் முத்தமிட்ட தடமென்று
மூன்று நாளான பின்னும்
மழித்திடாத அவன் கன்னம்….!
அவள் முகம் துடைத்த காகிதம்
ஆயிரம் ரூபாய் ப(ம)ணமெனவே
அவன் பர்சினுள் பத்திரமாய்….!
அவன் அம்மாவின் அழகு ஆரம்
அணிந்து இதழோரம் ‘அழகு’
காட்டிய அவன் தங்(கை)க முகம்….!
அப்ப்ப்……பா என்று அரவணைத்து
அவள் கொஞ்சிய வார்த்தைகளின்
அசரீரியாய் ஒலிக்கும் அவன்  காதில்….!!
அவன் அம்மா விட்டுக்கொடுத்த இடம்…..
அதில் அவள் பதித்திட்ட பாசத்தடம்….!
அவள் விட்டுச் செல்லும் வெற்றிடம்…???
மொட்டவிழ்ந்து ‘மணக்கும்’ ரோஜா
சேரிடம் சென்று சேர்ந்திருக்கும்.
முட்கள் சுமந்து நிற்கும் வேர்கள்-
‘காய்ந்து’ வக்கற்று சோர்ந்திருக்கும்…….!
MGR…
(எனது நண்பர் தனது ஒரே மகளைத் திருமணம் செய்து கொடுத்தபின்னர் சில நாட்கள் கழித்து நான் அவரைச் சந்தித்த போது “மகள் எப்படி இருக்கிறாள்” என்ற என் கெள்விக்கு பிரிவின் ஆற்றாமை தாளாது நடு ரோடென்றும் பாராது தெம்பி அழுத பின் “நல்லா  இருக்கா!” என்று கண்ணீருக்கிடையேயான புன்னகையுடன் சொன்ன கண்ணனுக்காக இந்தக் கவிதை)
(வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தபோது பதிவிட்ட கவிதை) 
(படங்கள் : நன்றி கூகிள்)

Saturday, 13 September 2014

எ(ஏ)ன் காதலே…?!










எ()ன் காதலே…?!
நீ வெட்கம் கொண்டால்
புது ரோஜாக்களும் – நாணி
தடுமாறித் தன் தலை குனியும்.
உன் புன்னகை மிளிர்ந்திட்டால்
மொட்டவிழும் முல்லைகளும்
புறமுதுகிட்டுத் தோற்றோடும்!
உன் கண்கள் தாம் அசைந்தால்
வண்டுகளும் தன் இனமென்று
அருகே வந்து சுற்றி மொய்க்கும்.
உன் துவளும் இடை கண்டு
‘உடுக்கை’யும் அயர்ந்துபோய்
படுக்கையில் ஓய்ந்து வீழும்.
நீ தளிர் நடை நடந்தாலோ
அன்னப் பறவையும் சற்றே
அசந்து அசைவற்று நிற்கும்.
உன் விரலழகைக் கண்டால்
காந்தள் மலர்களும் தன்
பொறாமையில் காந்தலாகும்.
தினமும் எனக்குக் கனா தரும்
என் கனவுலகில் உலாவரும்
ஆசை ஆதர்சக் காதலியே
மனங்கவர்ந்தும் முகமறியா
மாமரத்துக் குயி(ர)ல் ஆனவளே-
எங்கே பிறந்திருக்கிறாய் நீ?
ரவிஜி…@ மாயவரத்தான் எம்ஜிஆர்
(புகைப்படங்கள் : நன்றி கூகிள்)
(வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தபொழுது பதிவிட்டது)

சோகத்தொ(த)ங்கல்!

சோகத்தொ()ங்கல்!

உள்ளொன்று வீற்றிருக்க
புறமொன்று காட்(சி)டி நட(டி)க்கும்
முகமூடி() பொய் முகங்கள்!
விற்பனை ஆகாது தங்கிய
சோகம் தாளாது - தொங்கிய
இவனின் உண்மை முகமூடிகள்!
ரவிஜி---
(புகைப்படம் – ரவிஜி)
(காசி செல்லும் வழியில் சென்னையில் கிளிக்கியது) 
(வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த இரண்டாம் நாளில் வெளியிட்டது)