குமிழிகள்
கத்தும் கடலோரம்
காற்றை விரும்பி
மணல் மீது அமர்வு.
என் எதிரே-சோப்பு நீரில்
குமிழிகள் ஊதுகிறான்
விளையாட்டுச் சிறுவன்.
பல்வேறு அளவுகளாய் – பல
வண்ண வண்ண குமிழிகள்
மேன் மேலும்…!
காற்றில் மிதந்து
அலைகழிந்து வெவ்வேறு
திசைகளில்…
வெடித்துச் சிதறி
காற்றில் கரைகின்றன
வெவ்வேறு சமயங்களில்.
பூஜ்ய உ(க)ருப் பெற்று
பூஜ்யத்தில் உழன்றிருந்து
பூஜ்யமாகிப் போகிறோம
குமிழிகள் போல்-
மனிதர்கள் நாம்!
எண்ணம் முகத்தறைய
என்னையும் மீறி
முணுமுணுக்கிறேன்…!
‘காற்றில் கரையும்
குமிழிகள் செய்கிறான்…
கு(சு)றும்பன்!’
ரவிஜி…
பூஜ்ய உ(க)ருப் பெற்று
ReplyDeleteபூஜ்யத்தில் உழன்றிருந்து
பூஜ்யமாகிப் போகிறோம
குமிழிகள் போல்-
மனிதர்கள் நாம்!//
யதார்த்த வரிகள்@ பகிர்விற்கு நன்றி!
நன்றி நண்பரே...!
ReplyDeleteThanks, great blog.
ReplyDelete